மணற்கொள்ளைக்கு முடிவு
நல்லூர் பகுதியில் இடம் பெற்று வரும் மணற்கொள்ளை சம்பந்தமாக குறித்த இடத்திற்குச் சென்று நல்லூர் தவிசாளர் நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட உதயபுரம் பகுதியில் நீண்டகாலமாக மணற்கொள்ளை இடம்பெற்று வருவதாக மக்களினால் நல்லூர் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
முறைப்பாடுகளுக்கு அமைய நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமயில் உபதவிசாளர் ஜெயகரன் உறுப்பினர்களான வி.கே. குகானந்தன் மற்றும் கிரிதரன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரடியாக பார்வையிட்டு மக்களின் நீண்ட காலமாக நிலவுகின்ற பிரச்சனைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தவிசாளர் உறுதி மொழி வழங்கினார்.