Wed. May 15th, 2024

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்கள் ஆறு பேருக்கு கொரோனா

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட 504 விரைவான அன்டிஜன் பரிசோதனைகளில் ஆறு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தில் 11 வெளியேறும் இடங்களில் நேற்று முதல் விரைவான அன்டிஜன் சோதனைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பயணிகள் அல்லது கொழும்பிலிருந்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இயங்கும் நீண்ட தூர பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மீதும் விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை மூலம் வெள்ளவத்தையில் மேற்கொள்ளபட்ட சோதனையில் யாழ்ப்பாணத்துக்கு புறப்பட இருந்த பஸ்சின் சாரதிக்கு கோரோனோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்