Tue. May 14th, 2024

மட்டக்களப்பு கணபதி அறக்கட்டளையால் நிவாரண பொதிகள்

கணபதி அறக்கட்டளை மற்றும் GSHL இணைந்து வழங்கும் உதவித் திட்டத்தின் கீழ் 22 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
கீறீன் சோலர் ஹேல்டிங் [ லங்கா ] நிறுவன
நிர்வாகி k. ரமணதாஸ் [ லண்டன் ] அவர்கள் முன்வந்து வழங்கிய நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட தினக்கூலி செய்கின்ற மட்டக்களப்பு [மங்கிகட்டு] கிராமத்தின் 22 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்
மங்கிகட்டு கிராம சேவகர் சு.பாலசுந்தரம்  மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.முருகேசப்பிள்ளை
அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்கள் க.பத்திநாதன் [ அதிபர் ] நாவற்காடு மற்றும்.
பெண் செயற்பாட்டாளர் திருமதி துசியந்தன் தார்னி ஆகியோர் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்