இன்று 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று புதன்கிழமை வடக்கு மாகாணத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில் 840 பேருக்கான PCR முடிவுகளின் படி 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ் மாவட்டத்தில் 69 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் என 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 பேருக்கும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் 4 பேருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் மானிப்பாய் வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சாவகச்சேரி சுகாதார பிரிவில் 26, சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 10, கரவெட்டி சுகாதார பிரிவில் 6, உடுவில் சுகாதார பிரிவில் 5, யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் சுகாதார பிரிவில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.