மடு மாதா திருப்பலிக்கு அனுமதி
மடு மாதா திருப்பலி திருவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2ம் திகதி மடு மாதா திருப்பலி திருவிழா காலை 6.15 மணிக்கு மறை மாவட்ட ஆயர்களினால் கூட்டுத் திருப்பலி கொடுக்கப்படவுள்ளது. இதில் 30 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வெளி மாவட்டங்களில் இருந்து ஏனையோர் கலந்து கொள்வதற்கும், யாத்திரை செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.