சினோபார்ம் தடுப்பூசிகளை திருடிய ஊழியர்கள்
90,000 ரூபா மதிப்புள்ள 30 சினோபார்ம் தடுப்பூசிகளை திருடியது தொடர்பாக ஹபரடுவாவில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (எம்ஓஎச்) அலுவலகத்தில் உள்ள ஒரு ஓட்டுநர் மற்றும் எம்ஓஎச் அலுவலகத்தின் சிறு ஊழியர் மீது புகார் அளிக்கப்படுள்ளது
இந்த சம்பவம் குறித்து ஹபராடுவா போலீசார் விசாரணையைத் தொடங்கினர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.
மேலும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள காலி மாவட்ட எஸ்.எஸ்.பி.யால் ஒரு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.