கட்டடத்திலிருந்து தவறி வீழ்ந்தில் ஒருவர் பலி
கட்டடத்திலிருந்து தவறி வீழ்ந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நீர்வேலி பகுதியில் மேல் தளத்தில் தூண் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து போது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து காயத்துடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.