அமரர் செல்வக்குமார் ஞாபகார்த்தமாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
இலங்கை மின்சார சபையின் முன்னாள் உத்தியோகத்தர் அமரர் செல்வக்குமார் (செல்வண்ணா) ஞாபகார்த்தமாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அவரின் மகன் கபில்நாத் அவர்களின் நிதியுதவியில் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இராஜகிராமம், சாத்தியதோட்டம், கரவெட்டி மத்தி, மத்தொனி, கரணவாய் பகுதிகளில் தெரிவு செய்யயப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.