Fri. May 17th, 2024

பயணக் கட்டுப்பாடு தொடரலாம்

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப் பிடிப்பதாக தெரியவில்லை  இந்நிலை நீடித்தால் பயணத் தடையையும் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.” என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தனிமைப்படுத்தல் சட்டத்தையும், பயணக் கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் உரிய வகையில் பின்பற்றுமாறு நாட்டு மக்களிடம் பலதடவைகள் கேட்டுக் கொண்டுள்ளோம். எனினும், சட்ட திட்டங்களை மீறிச் செயற்படும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.

எனவே, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மக்கள் உரிய வகையில் செயற்படுவார்களா என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. நடைமுறைகளை மக்கள் தொடர்ச்சியாக மீறினால் பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படும். இதைவிட வேறு வழியில்லை என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்