பைசருக்காக காத்திருந்தவர் தொற்றால் மரணம்
வடமராட்சி நவிண்டில் பகுதியில் வெளிநாடு செல்வதற்காக பைசர் தடுப்பூசிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி நவிண்டில் பகுதியில் திடீரென இளம் குடும்பப் பெண் நேற்று உயிரிழந்தார்.
சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த தவேந்திரன் துளசிகா வயது 37 என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் திருமணம் செய்து கணவர் லண்டனில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண்ணும் லண்டன் செல்லவுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கடந்த மாத இறுதியில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 நாட்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் நோயின் தீவிரம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்காக பைசர் தடுப்பூசிக்காக காத்திருந்து ஏனைய தடுப்பூசிகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.