பாசையூரில் நாளை முதல் சுகாதார நடைமுறைகள் பிற்பற்றப்படும் அமைச்சர் வாக்குறுதி
குருநகர் பாசையூர் பகுதியில் சமூக இடைவெளிகளைப் பேணி கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக, பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேரடியாக சென்ற கடற்றொழில் அமைச்சர், சந்தை வியாபாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொலிஸார், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், நாளை காலை குறித்த இடத்திற்கு வருகை தந்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுமூக சூழல் ஏற்படுத்தப்படுத்தி தருவதாக கடற்றொழில் அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.