Thu. May 16th, 2024

கரவெட்டி சுகாதார பிரிவில் தடுப்பூசி ஏற்றும் திகதிகளில் மாற்றம் கவனமெடுக்கவும்

கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார பணிமனையினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி நாளை 1ம் திகதி ஜே/367, ஜே/364 கிராம அலுவலகர்  பிரிவினருக்கு யா/திரு இருதயக் கல்லூரியிலும்,  2ம் திகதி ஜே/376, ஜே/379 கிராம அலுவலகர் பிரிவினருக்கு  வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 3ம் திகதி ஜே/377, ஜே/381 கிராம அலுவலகர் பிரிவினருக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 4ம் திகதி ஜே/351, ஜே/362 கிராம அலுவலகர் பிரிவினருக்கு மூத்தவிநாயகர் கோவிலடிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது.  குறித்த தினத்தை தவறவிடுபவர்களுக்கு குறிப்பிடப்பட்ட சில காலத்திற்கு தடுப்பூசிகள் வழங்குவதிலும் சிரமம் ஏற்படும் என அறிய முடிகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்