கரவெட்டி சுகாதார பிரிவில் தடுப்பூசி ஏற்றும் திகதிகளில் மாற்றம் கவனமெடுக்கவும்
கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார பணிமனையினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி நாளை 1ம் திகதி ஜே/367, ஜே/364 கிராம அலுவலகர் பிரிவினருக்கு யா/திரு இருதயக் கல்லூரியிலும், 2ம் திகதி ஜே/376, ஜே/379 கிராம அலுவலகர் பிரிவினருக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 3ம் திகதி ஜே/377, ஜே/381 கிராம அலுவலகர் பிரிவினருக்கு வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியிலும், 4ம் திகதி ஜே/351, ஜே/362 கிராம அலுவலகர் பிரிவினருக்கு மூத்தவிநாயகர் கோவிலடிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது. குறித்த தினத்தை தவறவிடுபவர்களுக்கு குறிப்பிடப்பட்ட சில காலத்திற்கு தடுப்பூசிகள் வழங்குவதிலும் சிரமம் ஏற்படும் என அறிய முடிகிறது.