யாழ் அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை
யாழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தொடர்பாக யாழ் அரசாங்க அதிபர் மகேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ..
நாட்டில் கொவிட்-19 தொற்று பரவிவருகின்ற காரணத்தினால், தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு உதவி வழங்குவதாகத் தெரிவித்து, வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சில தனி நபர்கள், அமைப்புக்கள் நிதி திரட்டி வருவதாக அறியப்படுகின்றது.
ஆயினும் இந்த உதவிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் சென்றடைவதில்லை எனவும் குறிப்பிட்ட சிலருக்கு எல்லா வழிகளிலும் கிடைக்கப்பெறுவதாகவும் பொதுமக்களினால் அறியத்தரப்பட்டுள்ளது.
எனவே இதனை ஒழுங்குபடுத்த வேண்டி பொறுப்பு அரசாங்க மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு உரியது என்பதனால் அரசாங்க அதிபரின் கண்காணிப்பில் வழங்கப்படும் உதவிகளை தவிர்த்து வேறுமட்டங்களிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகள் அந்தந்த பிரதேச செயலாளர் ஊடாகவே வழங்கப்படல் வேண்டும் என்பதுடன் மாவட்டச் செயலகத்தின் முன் அனுமதியைப் பெற்று வழங்கப்படவேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது