Fri. May 17th, 2024

நெல்லியடி கொமேர்சல் வங்கி ஒரு மணித்தியாலம் மூடப்பட்டது.

நெல்லியடி கொமேர்சல் வங்கி ஒரு மணித்தியாலங்கள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் கொமேர்சல் வங்கிக்கு முன்பாக அதிகளவான வாடிக்கையாளர்கள் காணப்பட்டதையடுத்து நெல்லியடி பொலீஸ் நிலையத்தினால் குறித்த வங்கி மூடப்பட்டதோடு வாடிக்கையாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்குப் பின்னர் பொலீஸாரினால் அனுமதி வழங்கப்பட்டு மீளவும் திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவை கருதி குறைந்தளவிலான உத்தியோகத்தர்களுடன் வங்கிகள் இயங்குவதற்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இருப்பினும் பயணக் கட்டுப்பாட்டில் காரணங்களை கடமையில் ஈடுபடும் பொலீஸாருக்கு அறிவித்து வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கி மூடப்பட்டதால் பெரும் அசெளகரியம் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்