பருத்தித்துறை வைத்தியசாலையில் மூவர் கொரோனாவால் உயிரிழப்பு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மூவர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
அல்வாய் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண், திக்கம் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய ஆண் மற்றும் அல்வாய் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளனர்.