Fri. May 17th, 2024

கிராம அலுவலகர் தொடர்பாக அறியத் தரவும்

கிராம அலுவலகங்களில் தரித்து நிற்காத கிராம அலுவலகர் தொடர்பாக தனக்குத் தெரியப்படுத்துமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்
தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனாக வழங்கிவருவதனை பாராட்டுகின்றேன். பல கிராம அலுவலர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பணியாற்றிவருகின்ற அதே வேளை சில கிராம அலுவலர்களைப் பொதுமக்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கிராம அலுவலர்கள் அலுவலகத்தில் தரித்து நிற்காத சந்தர்ப்பங்களில் அக்கிராம அலுவலர்கள் சார்பில் சிலர் செயற்படுவதாகவும் அவர்களின் விருப்பு வெறுப்புக்கமைய அக்கிராம அலுவலர்கள் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அவ்வாறான கிராம அலுவலர்களைத் தாங்கள் அடையாளம் கண்டு பொருத்தமான அறிவுறுத்தலை வழங்கி பொதுமக்களுக்கு நேரடியான திருப்திகரமான சேவை கிடைப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்