பருத்தித்துறை தாதிக்கு கொரோனா தொற்று
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சையில் கடமையாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை நாவலர் வீதி முருகன் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் தாதி ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தொற்று பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.