கரவெட்டியில் தொற்றாளர்கள் அதிகரிப்பு
கரவெட்டி தெற்கு பகுதியில் நேற்றும் இன்றும் சேர்த்து 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரவெட்டி தெற்கு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புபட்டவர்களை சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களில் 128 பேருக்கு இன்று அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினமும் அப்பகுதியில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.