மந்திகை பொதுச் சந்தை முடக்கம்
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மந்திகை பொதுச் சந்தை மூடப்பட்டுள்ளது.
நேற்று மந்திகை சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்தே மந்திகை சந்தை மூடப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் துன்னாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றவர் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.