பருத்தித்துறையில் 7 பேருக்கு கொரோனா
பருத்தித்துறை சுகாதார பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.