Fri. May 17th, 2024

இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ் மாவட்டத்தில் 35 பேர் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை 1018 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ் மாவட்டத்தில் இன்று வைத்தியசாலைகளில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 7, தெல்லிப்பளை வைத்தியசாலையில் 6, சாவகச்சேரி மற்றும் கோப்பாய் வைத்தியசாலைகளில் தலா இருவருக்கும்,  தெல்லிப்பளை மற்றும் ஊர்காவற்துறை வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவில் சாவகச்சேரியில் 7, உடுவில் மற்றும் நல்லூர் சுகாதார பிரிவில் தலா இருவருக்கும்,  தெல்லிப்பளை, வேலணை, கரவெட்டி சுகாதார பிரிவுகளில் தலா ஒருவருக்கும் மற்றும் யாழ் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேரடித் தொடர்பு கொண்ட 9 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 4 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேருக்கும் என 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்