நெல்லியடி வெதுப்பகம் சென்றோரை தனிமை படுத்த கோரிக்கை
நெல்லியடி நகர்ப்பகுதியிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் கடமை புரியும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த வெதுப்பகத்திற்கு கடந்த 2 வார காலத்தினுள் சென்று வந்தவர்கள் இயலுமான வரையில் தமது வீடுகளிலே தனிமைப்பட்டு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் காய்ச்சல், தடிமன், இருமல், தொண்டை நோ மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலதிக விபரங்களைத் தங்களது பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் மூலம் அறிந்து கொள்ள முடியும். நன்றி. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கரவெட்டி