நெல்லியடி சந்தையில் ஒருவருக்கு கொரோனா
நெல்லியடி பொதுச் சந்தையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி பொதுச் சந்தை அதிகாலை குத்தகை வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எழுமாற்றாக கடந்த வெள்ளிக்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.