Sun. May 19th, 2024

பயிற்சி நெறியில் ஈடுபட்ட ஒருவருக்கு கொரோனா, சக ஊழியர்கள் 59 பேர் சுயதனிமைப்படுத்தலில்

சுகாதாரதுறை உதவியாளர் பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருடன் பணியாற்றிய  59 பேர் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இன்று (18) உடுவில் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஒருலட்சம் வேலை வாய்ப்பு நியமனம் வழங்கப்பட்டு சுகாதாரதுறை உதவியாளர் பயிற்சி நெறியை மேற்கொள்ளும் 60 பேரில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.  இதனால் அவருடன் பணியாற்றிய ஏனைய 59 பேரையும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பல இடங்களில் இருந்து இப்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்