உடுவில் பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா
இன்றைய பரிசோதனையில் உடுவில் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இன்று (18) வெள்ளிக்கிழமை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்கள் இருவரும் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மருதனார்மடம் கொத்தணி போல் உடுவில் கொத்தணி உருவாகும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.