நெல்லியடியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று நெல்லியடியில் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடும் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எழுமாறாக நெல்லியடி வர்த்தகர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெல்லியடி சந்தைக்கு அருகாமையில் இயங்கும் ரைட்டானிக் உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.