நீர்வேலி கொரோனா நோயாளி தலைமறைவு
கோப்பாய் நீர்வேலியைச் சேர்ந்த கொரோனா நோயாளி தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் சுகாதார பிரிவில் கோப்பாய் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கோப்பாய் பொலீஸார் இணைந்து தேடுதல் வேட்டை நடாத்திய போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.