நாளை முதல் பயணத் தடை நீக்கம்
நாளை திங்கட்கிழமை காலை 4 மணியுடன் பயணத்தடை நிறைவிற்கு வந்து தேசிய அடையாள அட்டை இலக்கம் பிரகாரம் தமது அத்தியாவசியத் தேவைக்காக மாத்திரம் வீதியில் பயணம் செய்ய முடியும் என பொலீஸ் ஊடகப் பேச்சாளர் பொலீஸ் மா அதிபர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை அதிகாலை வரைக்கும் பயணத்தடை விதிக்கப்பட்டது. அது தற்போது நிறைவடைந்தது அத்தியாவசியத் தேவைக்காக குடும்பத்தில் ஒருவர் தேசிய அடையாள அட்டை இலக்கம் பிரகாரம் வெளியே நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணத் தடை அமுலில் இருக்கும்