கரவெட்டி யார்க்கரு பிள்ளையார் கோயிலடியில் ஒருவருக்கு கொரோனா
யார்க்கரு பிள்ளையார் கோயிலடி கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 72 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 15ம் திகதி முதல் 30ம் திகதி வரை கைதடியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையிலும், கடந்த 13ம் திகதி நொதேண் தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.