நாளை பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி இல்லை
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இரணுவத் தளபதி தெரிவிக்கையில்
மரக்கறி, மீன்கடை, இறைச்சிக்கடை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகளை திறப்பதற்கு மட்டுமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதிக்கப்படும்..
மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரமே சென்று வாங்குமாறும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா கோரியுள்ளார்.
வாகனங்களில் செல்லாது நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கே செல்லவேண்டும் எனவும் பயணக்காட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலப்பகுதியில் குறைந்தபட்ச ஆளணியைக் கொண்டு வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.