Sun. May 12th, 2024

தேசிய மட்ட பளுதூக்கலில் வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம் 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கலில் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த க.ஜெசின் வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வியாழக்கிழமை வரை பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் ஆண்களிற்கான  17 வயதிற்குட்பட்ட 89 நிறைப் பிரிவில் 120 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப்  பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்