Fri. May 17th, 2024

தேசிய மட்ட கால்பந்தாட்டம் பற்றிக்ஸ் சம்பியன் ,சென்சேவியர் வெள்ளி பதக்கம்

வடமாகாண அணிகளுக்கிடையே 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கிடையே நடைபெற்ற தேசிய மட்ட  இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் வடமாகாண அணிகளான யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து மன்னார் சென்சேவியர் அணி மோதியது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதினர். முதல் பாதியாட்டத்தில் சென்சேவியர் அணி வீரர் ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் மன்னார் சென்சேவியர் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவது பாதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவ்வணி வீரர் றோகித் ஒரு கோலைப் பதிவு செய்து கோல்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினார். இதனையடுத்து சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்