Fri. May 17th, 2024

கிரிசாந்தினியின் ஹெற்றிக் கோல்களினால் சம்பியனாகியது மகாஜன கல்லூரி

கிரிசாந்தினியின் ஹெற்றிக் கோல்களினால் தேசிய மட்ட கால்பந்தாட்ட போட்டியில் சம்பியனாகியது தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி .
அகில  இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்களுக்கான தேசிய மட்ட கால்பந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சிறப்பான சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இறுதியாட்டம் இன்று கொழும்பு றேஸ் ஹோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணியை எதிர்த்து குருநாகல் பாலிக மலியதேவ மகா வித்தியாலய அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி வீராங்கனை கிரிசாந்தினி அடுத்தடுத்து இரு கோல்களைப் போட்டு அசத்த முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்திலும் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணியின் ஆதிக்கம் மேலோங்க அவ்வணி வீராங்கனை கிருசாந்தினி மேலும் ஒரு கோலைப் போட்டு ஹெற்றிக் சாதனையைப் பதிவு செய்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்