தும்பளையைச் சேர்ந்தவர் கொரோனாவால் மரணம்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.