உடுத்துறையில் கஞ்சா மீட்பு
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பரப்பில் பெருமளவிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு கடற்படையினரின் அதிரடி நடவடிக்கையால் 228 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக காங்கேசன்துறை பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட போது, 228கிலோ நிறையுடைய கஞ்சா மற்றும் வள்ளமும் கைப்பற்றப்பட்ட போதிலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர்.