நல்லூர் ஆலயத்திற்கு வருகை தருவதைத் தவிருங்கள்
நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரித்து வரும் நிலையில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அரசு விதித்துள்ளது. இதனைப் பலரும் கருத்தில் கொள்ளாது வீதிகளில் நடமாடுவதோடு நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவிலும் மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பெருமளவிலான பொலீஸார் குவிக்கப்பட்டதுடன் பொலீஸாரால் தடை விதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள் நுளைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதியின் குறுக்காக பொலீஸாரின் பேரூந்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.