இதுவரை கொரோனவால் இறந்த 80 வீதமானோர் எந்த தடுப்பூசிகளையும் பெறாதவர்கள்
இன்று வரை கோவிட் தொற்றுநோயால் இறந்த 7,587 பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைக் கூட பெற்றிருக்கவில்லை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) செயலாளர் டாக்டர். ஷெனல் பெர்னாண்டோ கூறினார். இது கோரோனோ தாக்கத்தால் இடம்பெற்ற மொத்த இறப்புகளில் 80.7% ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றவர்களில், 388 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது மொத்த இறப்புகளில் 4.1% ஆகும்.
இந்த எளிய தரவைப் படிக்கும் எவருக்கும் தடுப்பூசியின் முக்கியத்துவம் தெளிவாக தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, உங்கள் பெற்றோர், பெரியவர்கள் அல்லது உறவினர்கள் 60 வயதுக்கு மேல் இருந்தும், இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் என்றால், அவர்களுக்கு விரைவில் கோவிட் தடுப்பூசி போட ஊக்குவிக்கவும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.