Thu. May 16th, 2024

தவிசாளர் தெரிவு உறுப்பினர்கள் புறக்கணிப்பால் ஒத்திவைப்பு

வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இன்று உறுப்பினர்கள் புறக்கணிப்பால் பிற்போடப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் அண்மையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதனால் இன்று புதிய தவிசாளர் தெரிவு இடம் பெறும் என உள்ளூராட்சி ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் 16 பேர் காணப்பட்ட போதிலும் 5 பேர் மட்டுமே தெரிவில் சமூகமளித்திருந்தனர். தெரிவில் 50%ற்கும் குறைவானோர் சமூகமளித்ததனால் தவிசாளர் தெரிவு ஒத்தி வைக்கப்பட்டது.
இதில் சுயேட்சை குழு உறுப்பினர்கள் மூவரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறவினர்கள் இருவரும் என 5 பேர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்