Thu. May 16th, 2024

தனது தந்தையை போல மக்களுக்காக சாகவும் தயார் – சஜித் பிரேமதாச

மறைந்த எனது தந்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவைப் போலவே மக்களுக்காக தனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று மாலை பதுளையில் உள்ள வீல்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதார அமைப்பு எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை தோற்றுவிப்பவர்களை அடையாளம் கண்டு நாட்டில் உள்ள பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும் நாட்டில் ஒருபோதும் இது அனுமதிக்கப்படாது என்றும் கூறினார்.
நாட்டிற்கு நன்மை அளிக்க கூடிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களே கையெழுத்திடப்பட வேண்டும் என்று கூறியா அவர் , நாட்டிற்கு தீங்கு விளைவிக்ககூடிய எந்தவொரு பாதுகாப்பு, வர்த்தகம் அல்லது அரசியல் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன் என்று உறுதியளித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்