தடுப்பூசி ஏற்றல் நாளை முதல் ஆரம்பம்
நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாளை முதல் யாழ் மாவட்டத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்திற்குமான தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மாவட்டங்களில் ஒவ்வொரு சுகாதார பிரிவிலும் தொற்றாளர்கள் அதிகளவு காணப்படுகிற இடங்களில் அதிகளவு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது.