சுபாஸ் பேக்கரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சுபாஸ் பேக்கரியுடன் தொடர்புடைய 5 பேருக்கு இன்று புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று முன்தினம் 44 பேருக்கு PCR பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில்
சுபாஸ் பேக்கரி தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட 5 பேருக்கே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.