நெல்லியடியில் Pizza விற்பனையாளருக்கு கொரோனா
நெல்லியடி பகுதியில் Pizza விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு இன்று புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரவெட்டி சுகாதார பிரிவினரால் தமது பகுதியில் முகக் கவசத்தை முறையாக அணியாதவர்களை கடந்த இரு வாரங்களாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இதில் குறித்த நபர் முகக் கவசம் முறையாக அணியாததால் கடந்த கிழமை முதல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு நேற்று முன்தினம் PCR மாதிரிகள் எடுக்கப்பட்டது. இன்று வெளியான முடிவில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.