Sun. May 19th, 2024

சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா

இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் ஒருவருக்கும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இருவருக்குமாக மொத்தமாக மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 416  பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.  இதில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஏற்கனவே யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் உடுவிலைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்