Sun. May 19th, 2024

சித்த மருத்துவ மனையில் இடைத் தங்கல் நிலையம் திறந்து வைப்பு

மன்னார் மாவட்டத்தில் நேற்று சித்த மருத்துவ மனையில் இடைத்தங்கல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் செயற்படும் மன்னார் மாவட்டத்தில் நறுவிலிக்குளத்தில் அமைந்துள்ள
சித்த  மருத்துவமனையில் நேற்று  (23/09/2021) 2.30 pm  Covid19 இடை தங்கல்  சிகிச்சை நிலையம்    அதிதிகளினால் வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட சித்தமருத்துவனையின் மருத்துவ அத்தியட்கர் Dr.R.மணிவர்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  இராணுவ உயர் அதிகாரிகள் , மேலதிக   அரசாங்க அதிபர்  சுகாதார  சுதேச வைத்திய  அமைச்சின்  செயலாளர். திரு  செந்தில் நந்தனன் .மன்னார் மாவட்டத்தின்  சுகாதார  சேவைகளின்  பணிப்பாளர் Dr. D. விநோதன். மற்றும் வைத்திய அதிகாரிகள்  , ஆயுள்  வேத  மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள் என  பலர் கலந்து  சிறப்பித்தனர்.
இந்  நிகழ்வின்  அதிதிகளின் வரிசையில்   மாகாண  ஆணையாளர் Dr.(Mrs). K. ஜெபநாமகணேசன்  உட்பட  பிரதி  மாகாண ஆணையாளர் Dr. S. சத்தியசீலன் அவர்களும்  கலந்து சிறப்பித்திருந்தனர்.  அத்துடன்  Covid 19 Coordinator  Northern  province.   Dr.R. அஜந்தன்  அவர்களும் கலந்து  சிறப்பித்திருந்தனர்  . சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண  ஆணையாளர் Dr.(Mrs). K. ஜெபநாமகணேசன் அவர்கள் வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்