சிகிச்சை முடிவடைந்தது வீடு திரும்பியவர் கொரோனாவால் மரணம்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின்னர் சிகிச்சை முடிவடைந்தது வீடு திரும்பிய நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.