அவசரகால விதிமுறைகள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பு
மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்காக அரசாங்கம் அறிவித்த அவசரகால விதிமுறைகள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு 132 எம்.பி.க்கள் அதற்கு ஆதரவாகவும் 51 எதிராகவும் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு நேரத்தில் மொத்தம் 31 எம்.பி.க்கள் சமூகமளித்திருக்கவில்லை
20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஏசிஎம்சி மற்றும் எஸ்எல்எம்சியின் முஸ்லீம் எம்.பி.க்கள் உட்பட அந்த எம்பிக்கள் அவசரகால விதிமுறைகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த்குமாரும் ஆதரவாக வாக்களித்தார்.
விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ரணில் விக்ரமசிங்க உட்பட சுமார் 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை