சாவகச்சேரி உபதவிசாளர் உட்பட பலருக்கு தொற்று
சாவகச்சேரியில் சாவகச்சேரி உப தவிசாளர் உட்பட பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார பிரிவில் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தவிசாளர் அண்மையில் தனது வீட்டில் பூப்புனித நீராட்டு விழாவில் பலர் கலந்து கொண்டதாகவும், ஒரிரு தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்விலும் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது. இதனால் சாவகச்சேரி பகுதியில் மேலும் பலருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.