Thu. May 16th, 2024

சாவகச்சேரியில் ஒருவர் பலி, 97 பேருக்கு தொற்று

தென்மராட்சி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர்,  கைதடி முதியோர் இல்லத்தில் 72 பேர் என தென்மராட்சியில் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 103 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் 25 பேருக்கும், கைதடி முதியோர் இல்லத்தில் 154 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் 72 பேருக்கும் என தென்மராட்சியில் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்