ஊடகவியலாளர் கொரோனாவால் மரணம்
கச்சாய், கொடிகாமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஷ்,
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதியுற்ற நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தனது முகநூலில் தனக்கு 3 தினங்களாக காய்ச்சல் பீடிக்கப்பட்டு உள்ளதாகவும், அன்ரிஜன் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குணமடைந்ததன் பின்னர் ஊடகப் பணி தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணத்தால் உயிரிழந்துள்ளார். ஊடகத் துறையினர் அனைவரும் தமது அஞ்சலிகளைச் செலுத்திய வண்ணம் உள்ளனர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.