Fri. May 17th, 2024

சட்டவிரோத மணல் ஏற்றல் பொலீஸார் துப்பாக்கிச் சூடு

அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியது. இச்சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.

சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக் கொண்டு வந்த போது அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியால் வந்த போது வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது வாகனத்தை நிறுத்தாமல் சென்ற போது உழவு இயந்திரத்தின் சில்லுக்கு துப்பாக்கிச்சூடு நடாத்திய போது வாகனம் குடைசாய்தது. இதனையடுத்து வாகனத்தில் பயணித்த மூவரும் தப்பியோடியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்